சென்னையில் மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

0 212

சென்னையில் மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவை மூன்றுக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுத்து பயணிகளின் நேரம் விரயமாவதைத் தடுக்க, ஸ்மார்ட் கார்டு மூலமாக டெல்லி மும்பை போன்ற நகரங்களில் உள்ள நடைமுறையைப் பின்பற்றி, ஒரே டிக்கட் மூலம் பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது.

இதற்கான டெண்டர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும்
முதற்கட்டமாக டிசம்பர் மாதத்தில் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையிலும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments