மயிலாடுதுறை தீவைத்த காதலி - 6 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி காதலன் உயிரிழப்பு

0 361

மயிலாடுதுறையில் காதலனுடன் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி காதலி தீவைத்ததில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காதலன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கடந்த 9ம்தேதி காதல் ஜோடியான ஆகாஷ்-சிந்துஜா இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருவர் மீதும் சிந்துஜா பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது.

6 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த காதலன் ஆகாஷ் உயிரிழந்த நிலையில், கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

50 சதவீத தீக்காயங்களுடன்தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காதலி சிந்துஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments