கரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 258

கரூர் அருகே ஆண்டான் கோவில் புதூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.

நேற்று மாலை விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாயக்  கிணற்றின் அருகே மாணவர்களின் உடைகள், செருப்புகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர்  3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments