காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

0 203

வருமானத்திற்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை நொளம்பூரில் உள்ள காஞ்சிபுரம் முன்னாள் சுகாதார துறை இணை இயக்குனர் பழனியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான 8 போலீசார் நடத்தி சோதனையின் போது, பழனியின் சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், வீட்டில் இருந்த நகைகள், விலை மதிப்பு மிக்க பொருட்கள் உள்ளிட்டவை  ஆய்வு செய்யப்பட்டன.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பழனி தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments