வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல்

0 260

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

ஏற்கனவே வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள மோடி தற்போது 3ஆவது முறையாக களம் இறங்கவுள்ளார். வாரணாசியில் நேற்று மாலை 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் திரளான மக்கள் பங்கேற்று மோடியை வரவேற்றனர்.

ரோடு ஷோவின் இறுதியில் காசி விசுவநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், வாரணாசி வந்த பிறகு புத்துணர்ச்சி பெற்றதாக தெரிவித்தார்.

தனது 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக விசுவநாதரிடம் வேண்டிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments