10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை 4ஆம் கட்ட மக்களவை தேர்தல்

0 220

10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை 4ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதி தேர்தலுடன் 175 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகம் உள்ள ஆறு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments