"மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க ராகுலுக்கு தகுதியில்லை" - பா.ஜ.க
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
முக்கிய பிரச்சினைகள் குறித்த பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, பிரதமர் உடன் விவாதம் செய்ய ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ அல்ல என்றார். நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே உள்ள அவர், எந்த அடிப்படையில் பிரதமர் உடன் விவாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
Comments