கூகுள் மேப்பை நம்பி முட்டுச்சந்தில் சென்று விபத்து.. காரை இயக்கிய வடமாநில பெண் போதையில் இருந்தாரா..?

0 452

சென்னையில் அதிகாலையில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சொகுசு காரை ஏற்றிய வட மாநிலப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கூகுள் மேப்பை நம்பி முட்டுச்சந்தில் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்கள் அசோக் நகர் 10-வது தெருவில் வீட்டுக்கு முன்னே உள்ள சாலையில் தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த இவ்விபத்தில் 4 பெண்கள் உட்பட 7 பேருக்கு காலில் காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது பெண் போதையில் இருந்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments