கல்குவாரியில் வைக்கப்பட்ட வெடியால் பறந்து வந்த கல்.. விவசாயி மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பலி

0 278

வந்தவாசி அருகே எடப்பாளையத்தில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிதறிப் பறந்த கல் ஒன்று ஆறுமுகம் என்ற விவசாயியின் தலையில் விழுந்தில் அவர் உயிரிழந்தார்.

கல்குவாரியால் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் நடத்தி வரும் அந்தக் கல்குவாரியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி வெடிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கல்குவாரியில் எந்தவிதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments