மனைவி வேறு இளைஞருடன் நெருங்கியதால் விபரீதம்... 2 குழந்தைகளை கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை...

0 517

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மோகன் என்ற நபர் தன்னைவிட 20 வயது குறைவான மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இனிமேல் மனைவி மீது சந்தேகப்பட மாட்டேன் என காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி யமுனா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், தனது 13 வயது மகளை கழுத்தை அறுத்தும், 5 வயது மகனை கழுத்தை நெரித்தும் மோகன் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

மனைவி வேறு ஒரு இளைஞருடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறியதால் மோகன் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments