நீதிபதி தெரிவித்த கருத்தின் அடிப்படையில்... ரெட்பிக்ஸ் யுடியூப் சேனல் எடிட்டர் கைது

0 312

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ரெட்பிக்ஸ் யுடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி தனிப்படை போலீஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். 

ரெட்பிக்ஸ் யுடியூப் சேனலில், பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியானது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவரது முன்ஜாமீன் மீதான விசாரணையின்போது,நேர்காணலுக்கு வருபவர்கள் அவதூறான கருத்துகளை தெரிவிக்கத் தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments