சென்னையில் பயங்கரம் - பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்றுவிட்டு; தந்தை தற்கொலை

0 313

சென்னை மேற்கு மாம்பலத்தில், தன்னை விட 20 வயது குறைவான மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் கொடூரமாக கொன்ற தந்தை பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மோகன்- யமுனா தம்பதிக்கு இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் காவல்நிலைய சமரசத்தின் பேரில் இருவரும் சேர்ந்து வசித்துவந்துள்ளனர்.

நேற்று மாலை பணி முடிந்து யமுனா வீட்டிற்கு திரும்பியபோது,  13 வயது மகள் சாய் ஸ்வாதியை கழுத்தை அறுத்தும், 5 வயது மகன் தேஜஸை கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டு, மோகனும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சமாதானம் ஆன பிறகும் அதிருப்தி விலகாததால் மோகன் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments