திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளர் மீது ஆட்டோ ஓட்டுனர்கள் தாக்குதல்... சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

0 245

திருப்பூரில் மொபைல் கடை உரிமையாளரை தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சாரதாநகரில் காசன்கான் என்பவரின் மொபைல் கடை எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.

இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், கசான்கானிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து ஜிபே மூலம் அனுப்பும்படி கூறினர்.

அதற்கு அவர் பத்து ரூபாய் சர்வீஸ் சார்ஜ் கேட்டதாக கூறப்படுகிறது. எங்களிடமே கமிஷன் கேட்கிறாயா? எனக்கூறி தகராறு செய்து, சரமாரியாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments