ராமேஸ்வரத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் பதுங்கிய பாம்பு... அலறி அடித்துக்கொண்டு ஓடிய வாடிக்கையாளர்கள்

0 331

ராமேஸ்வரம் பாரதி நகர் அருகே சூப்பர் மார்க்கெட்டில், நுழைவு வாயிலில்  வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜுக்கு அடியில் பதுங்கிய பாம்பை கண்ட,  பெண் வாடிக்கையாளர்கள்  அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

தகவலறிந்து  வந்த ராமேஸ்வரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏழு பேர்  கொண்ட குழுவினர், பாம்பை போராடி பிடித்தனர்.

பிடிபட்ட  நல்ல பாம்பு 5 அடி நீளம் இருந்ததாகவும், அதனை  உடனடியாக அடர்ந்த காட்டுக்குள்  விட உள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments