மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது

0 412

பழனி அருகே மாமியாரை வெட்டிக் கொன்று விட்டு, மனைவியின் கையை மணிக்கட்டோடு வெட்டி வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயபால் என்ற அந்நபரை அவரது மனைவி நிவேதா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2 குழந்தைகளுடன் கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள தமது தாய் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவர் மீது அருகில் இருந்த காவல் நிலையத்தில் நிவேதா புகாரும் அளித்தாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிவேதா வீட்டுக்கு சென்ற ஜெயபால், தம்மீதான புகாரை திரும்பப் பெறுமாறு கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து நிவேதா மற்றும் அவரது தாயை வெட்டிவிட்டு தப்பியதாகவும் தெரிவித்த போலீசார், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாமியார் சித்ரா சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments