கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலை மறித்து அய்யாக்கண்ணு போராட்டம்

0 237

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ததாக குற்றம்சாட்டி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலை மறித்து சுமார் இரண்டு மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் அய்யாக்கண்ணு மற்றும் அவருடன் செல்பவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட 120 டிக்கெட்டுகளில் 40 உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், அதே ரயிலில் பயணம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments