கோடை வெயில் காரணமாக கருகும் வெற்றிலைக் கொடிக்கள்... உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ விவசாயிகள் கோரிக்கை

0 174

கடும் கோடை வெயில் காரணமாக, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், புதூர், பழையூர், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதியில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலைக் கொடிகள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

10 கிலோ கிடைக்கும் இடத்தில் அரை கிலோ முதல் ஒரு கிலோ மகசூல் மட்டுமே கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ச்வெற்றிலை விலை கிலோ 200 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், விளைச்சல் குறைவாக இருப்பதால், உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments