அட்சயத் திருதியை நாளான இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை

0 317

அட்சயத் திருதியை நாளான இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் 52 ஆயிரத்து 920ஆக விற்பனையான ஆபரணத் தங்கம், இன்று காலை முதலில் 360 ரூபாய் உயர்வு கண்டு  53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது.

சிறிது நேரத்திலேயே மேலும் 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 705 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments