சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த தி.மு.க பிரமுகர்கள் 2 பேர் உள்பட 4 பேரை கைது

0 193

சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பட்டாசு விற்பனை ஏஜென்டிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜ் வீட்டிற்குச் சென்ற சிலர் தாங்கள் வருமான வரித்துறையினர் எனவும் வரி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50 லட்சம் ரூபாய் கேட்டு முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

மீதி பணத்தை செல்ஃபோனில் தொடர்ந்து கேட்கவே டி.எஸ்.பி அலுவலகத்தில் சிவராஜ் புகாரளித்தார். விசாரணையில், சிவராஜின் நண்பரான கருப்பசாமியின் ஏற்பாட்டின் பேரிலேயே இந்த மோசடி நடைபெற்றது தெரிய வந்தது. கைதானவர்களில் கருப்பசாமி, ரமேஷ் ஆகியோர் திமுக நிர்வாகிகள் என போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments