விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலி - 13 பேர் காயம்

0 206

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்.

திருத்தங்கலை சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்ளிட்ட 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர்.

காயமடைந்த 13 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் கே. கே.எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

விபத்து நடந்த பட்டாசு ஆலை வளாகத்தை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி, விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments