ஏடிஎம் மெஷினில் டெபாசிட் செய்ய வந்தவரிடம் ரூ.50,000 போலீஸ் உடையில் வந்து அபகரிப்பு

0 279

சென்னை, தியாகராய நகரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் டெபாசிட் செய்ய வந்தவரை மிரட்டி, போலீஸ் உடையில் இருந்த நபர் 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரத்தில் கார்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் அர்ஷத்திடம் 3 லட்சம் ரூபாயை கொடுத்து ஏடிஎம் மெஷினில் பணத்தை டெபாசிட் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது.

தியாகராய நகர் ஜிஎன் செட்டி தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை டெபாசிட் செய்ய அர்ஷத் நின்றிருந்தபோது, போலீஸ் உடையில் வந்த நபர் அர்ஷத்தை வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இவ்வளவு பணம் எப்படி வந்தது, ஹவாலா பணமா என கேட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் விசாரணைக்கு அழைத்துச் செல்வேன் என மிரட்டி பணத்தை பறித்து சென்றதாகவும் அர்ஷத் புகார் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments