அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு

0 233

தேர்தல்களில் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமையோ, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதோ அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

எந்த ஒரு வழக்காக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படும்போது, அரசியல்வாதி மட்டும் சிறப்புச் சலுகை கோருவதை அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அப்படி தனிச் சலுகை காட்டினால், அது சமத்துவத்துக்கு எதிரானது என்றும், பாகுபாடு காட்டுவதாக அமையும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments