வேகத்தடை மீது வேகத்தை குறைக்காமல் பைக்கை செலுத்திய இளைஞர்

0 557

குற்றாலம் அருகே, கடந்த 7ஆம் தேதி இரவு, எச்சரிக்கை கோடு இருந்த வேகத்தடை மீது வேகமாக இருசக்கர வாகனத்தை செலுத்திய இளைஞர் தடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இலஞ்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஆறுமுகம் என்ற நபர், ஐந்திணையிலிருந்து, குற்றாலம் நோக்கி பைக்கில் சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாததால், தலையில் படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments