திருவள்ளூரில் திண்ணையில் இடம் கேட்டு திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது

0 299

திருவள்ளூர் மாவட்டம் சக்கரமநல்லூரில், தாகத்துக்குத் தண்ணீர் கேட்பது போல் சென்று, வீட்டு உரிமையாளர் அயர்ந்த நேரம் பணம், நகையைத் திருடிச் சென்ற கும்பல் போலீசிடம் பிடிபட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேராக வந்த ஒரு கும்பல், துளசிராமன்என்பவரது வீட்டில் குடிக்கத் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு சிறிது நேரம் திண்ணையில் ஓய்வெடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர்.

துளசிராமனின் மனைவி, கால்நடைகளுக்கு உணவளிப்பதற்காக வீட்டின்பின்புறம் சென்றதும் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல், பீரோவை உடைத்து 3 சவரன் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments