அம்பானி, அதானியிடம் கறுப்பு பணம் வாங்கினாரா ராகுல்?: பிரதமர் கேள்வி

0 298

அம்பானி, அதானி பற்றி பேசாமல் இருக்க எத்தனை மூட்டைகளில் கறுப்பு பணத்தை ராகுல் காந்தி வாங்கினார்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், 5 ஆண்டுகளாக அம்பானியையும், அதானியையும் விமர்சித்து வந்த ராகுல், ஒரே இரவில் அவர்கள் பற்றி பேசுவதை நிறுத்தியதாகவும் விமர்சித்துள்ளார்.

பணம் நிரப்பப்பட்டிருந்த டெம்போ ஒரு வேளை காங்கிரசுக்குக் கிடைத்துவிட்டதா? என வினவியுள்ள பிரதமர், இது குறித்து நாட்டு மக்களுக்கு அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments