தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..!

0 267

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பனங்குடி, புத்தூர், மஞ்சகொல்லை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் வெப்ப சலனம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. வேதாரணியம் திருக்குவளை சுற்று வட்டார பகுதிகளிலும் வெயிலில் தாக்கம் குறைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பேருந்து நிலையம், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டன் சுற்று வட்டார பகுதிகளான சேந்தமங்கலம், மண்டபாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments