தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் நற்சான்று வழங்குகிறது - பிரதமர் மோடி

0 280
தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் நற்சான்று வழங்குகிறது - பிரதமர் மோடி

வெடிகுண்டு வைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி உயிர்களைப் பறித்த தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் நற்சான்று வழங்குவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மகாராஷ்டிராவின் அகமது நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரசின் பி டீம் எல்லைக்கு அப்பால் செயல்பட்டு வருவதாக கூறினார்.

மும்பை குண்டுவெடிப்பை நடத்தியது பாகிஸ்தான் என நீதிமன்றங்கள் கூறியதாகவும் உலகமே அதை அறிந்துள்ள நிலையிலும் தீவிரவாதிகள் அப்பாவிகள் என காங்கிரஸ் கட்சி சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்த பிரதமர், மும்பை தாக்குதலை நடத்திய கசாபின் பக்கம் காங்கிரஸ் நிற்பதாகவும் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments