பிரிட்டன் பாதுகாப்புத்துறையை குறிவைத்து சைபர் தாக்குதல்... சீனாவின் கைவரிசையா என பிரிட்டன் அதிகாரிகள் சந்தேகம்

0 242

பிரிட்டன் பாதுகாப்புத்துறையை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், ராணுவ வீரர்கள் சிலரின் வங்கி கணக்கு விவரங்கள், வீட்டு முகவரிகள் போன்ற தகவல்கள் திருடுபோயிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவத்தினருக்கு ஊதியம் வழங்குவதற்காக நியமக்கப்பட்டிருந்த நிறுவனத்தில் உள்ள கணிணிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதையடுத்து இணைய வசதிகள் உடனடியாக துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ராணுவ வீரர்களின் ஊதிய விவரங்களை தெரிந்துகொண்டு, பின்னர் அவர்களுக்கு பணத்தாசை காட்டி  ராணுவ ரகசியங்களை திருட சீனா இவ்வாறு செய்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments