ஈரானிலிருந்து படகில் தப்பி வந்த 6 தமிழக மீனவர்கள்... 16 நாட்கள் பயணம் செய்து கேரளா வந்தடைந்தனர்

0 308

ஈரான் நாட்டில் அரேபிய முதலாளி ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததுடன் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகக் கூறி அந்நாட்டில் இருந்து தப்பிய கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் 16 நாட்கள் பயணித்து படகு மூலம் இந்திய கடல் எல்லைக்கு வந்தனர்.

கேரளாவை ஒட்டிய கடற்பகுதியில் டீசல் இல்லாமல் தத்தளித்த அவர்களது படகை  இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு கொச்சி துறைமுகத்தில் கரை சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments