சூப்பர் மார்க்கெட்டில் தவறவிட்ட குழந்தையை அரை மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு

0 242

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அழுது கொண்டே சென்ற 3 வயது ஆண் குழந்தையை போலீசார் அரை மணி நேரத்தில் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆத்விக் என்ற அந்த குழந்தை தனது தாய் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கிருந்து வெளியேறி சாலையில் வழி தெரியாமல் அழுதபடி சென்று கொண்டிருந்ததாகவும், இதைப் பார்த்த இளைஞர் ஒருவர் குழந்தையை கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது.

அங்கிருந்த போலீசார் குழந்தைக்கு பிஸ்கட், சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்தி பெற்றோரைப் கேட்டுத் தெரிந்து வரவழைத்தனர். உறவினர்கள் கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக் கொண்டு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments