சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தவர்கள் மீது நடவடிக்கை... 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதிவு , ரூ.6 லட்சம் அபராதம் வசூல்

0 221

சென்னையில் வாகனப் பதிவு எண் பலகையில் விதிகளை மீறி தங்கள் பணி சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததாக கடந்த 5 நாட்களில் ஆயிரத்து 200 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து 6 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகன பதிவு எண் பலகையில் தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது என எச்சரித்துள்ள போலீசார், முதல்முறை 500 ரூபாயும், 2ஆவது முறை ஆயிரத்து 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என மீண்டும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments