கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொன்று நகை பறிப்பு.. சிசிடிவி காட்சிகளை வைத்து 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை

0 260

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில், கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துச் சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

பெண்ணின் உடலை போலீஸார் மீட்கும்போது, கொலை செய்த நபர் வீட்டுக்குச் சென்று ஷேவ் செய்து, குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்ததாக விசாரணையில் அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஐ.ஜி பவானீஸ்வரி, குற்றங்களைத் தடுக்க வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட பெண்ணுடைய மகளின் உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments