சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தங்க நகைகளுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

0 459

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோவையிலிருந்து சேலத்திற்கு 666 கோடி ரூபாய் மதிப்புடைய 810 கிலோ தங்க நகைகளை ஏற்றிச் சென்ற தனியார் சரக்கு வாகனம், சமத்துவபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேன் ஓட்டுனர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் பலத்த காயம் அடைந்தனர்.  சித்தோடு காவல்துறையினர் தங்க நகைகளுடன் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் மாற்று வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க நகைகளை மீண்டும் சேலம் நோக்கி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments