மூடப்பட்ட பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி ரகளை செய்த விவகாரம்.. ஒருவர் கைது 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

0 179

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் இரவு மூடப்பட்டிருந்த  பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் கேட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

பெட்ரோல் பங்க் மேலாளர் கிரி என்பவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வாகன சோதனையில் பிடிபட்ட சங்கித் என்ற நபரே மிரட்டல் விடுத்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தப்பிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments