தேர்தல் முடிந்த பிறகு நாட்டு நலனுக்காக பெரிய மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளேன் - மோடி

0 231

மக்களைத் தேர்தல் முடிந்த பிறகு, நாட்டின் நலனுக்காக பெரிய மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது அடுத்த பதவிக் காலத்துக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை தான் ஏற்கெனவே தயார் செய்துவிட்டதாகத் கூறினார். 

முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமத்தால் நாடு பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் தேர்தலுக்குப் பிறகு ஒருநாள்கூட வீணாகாமல் செயல்படப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்கூட்டியே திட்டமிடல் என்பது தனது இயல்பு என்றும், அது கடவுள் கொடுத்த வரம் என்றும், தனது சாஃப்ட்வேர் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார்.

முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றுவதை குஜராத்திலேயே செயல்படுத்தியதாகவும், 2014 மற்றும் 2019 தேர்தலில்கூட தான் அப்படி திட்டமிட்டுப் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments