பிரபல சினிமா இயக்குநர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 22 வயது பெண் புகார்

0 923

சினிமா ஆசை காட்டி தம்மிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மீது கோவையைச் சேர்ந்த 22 வயது பெண் புகார் அளித்துள்ளார்.

கிடா விருந்து, விழித்தெழு, இரவினில் ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேலம் சினிமா நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற அந்த இயக்குநரை தாம் திரைப்பட வாய்ப்பு கேட்டு அணுகிய போது சேலம் வரச் சொல்லி, லொக்கேஷன் பார்ப்பதாகக் கூறி ஏற்காட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ள அப்பெண், பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மதுபான விடுதி ஒன்றுக்கு கூட்டிச்சென்று மது அருந்தி விட்டு தன்னையும் மது குடிக்க கட்டாயப் படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுத்து அங்கிருந்து புறப்பட்ட தன்னை தமது அலுவலகத்துக்கு கூட்டிச் சென்று அத்துமீற முயன்றதாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர் தமிழ் கடுமையாக தாக்கியதாகவும் அப்பெண் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments