திருநெல்வேலி காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை

0 222

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தனுஷ்கோடி ஆதித்தனுடனும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு அதனை வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திசையன்விளை அருகே கரைசுற்றுப்புதூரில் உள்ள ஜெயக்குமார் தனசிங்கின் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இதனிடையே, பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது ஜெயக்குமார் தனசிங்கின் உடல் தான் என உறுதிப்படுத்த டிஎன்.ஏ. சோதனை நடத்துமாறு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments