குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம்... செருப்புக்கடைக்காரரை அடித்துக் கொன்றதாக 4 பேர் கைது

0 310

தெரு நாயை பேசுவது போல தன்னைப் பற்றி ஜாடை பேசியதாகக் கூறி செருப்புக் கடைக்காரரை அடித்துக் கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அடுத்தடுத்து வீட்டில் வசித்து வந்த செருப்புக் கடை நடத்தி வரும் ஆனந்த குமாருக்கும், முன்னாள் டாஸ்மாக் ஊழியர் சுரேஷுக்கும் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டுக்கு முன்னால் படுத்திருந்த தெரு நாயை ஆனந்த குமார் சத்தமாக திட்டியதாக கூறப்படுகிறது.

ஆனந்த குமார் திட்டியது நாயை அல்ல, தன்னைத் தான் என்று கூறி அவருடன் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பேச்சு முற்றி கைகலப்பாகி ஆனந்த குமாரை சுரேஷ், அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர் சேர்ந்து கம்பி மற்றும் கல்லால் அடித்து கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments