கன்னியாகுமரியில் சக நண்பரின் இல்ல திருமணத்தில் பங்கேற்க சென்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி பலி

0 524

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரத்திலுள்ள லெமூரியா பீச்சில் கடலில் குளித்த திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற சக மாணவரின் சகோதரர் திருமணத்தில் பங்கேற்பதற்காக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

ஞாயிறன்று திருமணம் முடிந்த நிலையில் மாணவ-மாணவிகள் 12 பேர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையிலும் அவர்கள் கடலில் குளித்த போது ராட்சத அலை அவர்கள் 12 பேரையும் இழுத்துச் சென்றுள்ளது.

அவர்களின் கூக்குரலைக் கேட்டு அங்கிருந்த கடற்கரை கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு 7 பேரை மீட்டனர். எனினும், 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments