கள்ளக்காதலுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக வேலை செய்யும் வீட்டில் நகையை திருடிய பெண் கைது

0 492

சென்னை நங்கநல்லூரில் வேலை செய்த வீட்டில் 10 சவரன் நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ள 30 வயது பெண், ஆண் நண்பருடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பரிமளா என்ற அப்பெண் பணியாற்றி வரும் டில்லிபாபு என்பவரது வீட்டு பீரோவில் இருந்த நகைகளில் 10 சவரன் மட்டும் அண்மையில் காணமல் போனதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பரிமளா புதிய பைக், செல்போன் போன்றவற்றுடன் வந்ததால் சந்தேகமடைந்த டில்லிபாபு போலீசில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து தலைமறைவான பரிமளாவை அவரது செல்பேசி எண் மூலம் குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் பிடித்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments