12 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு

0 335

மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்டத்தில், குஜராத்தில் 26 தொகுதிகள், கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10 உள்ளிட்ட 12 மாநிலங்களில் 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, காந்தி நகரிலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மெய்ன்புரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிராவில் பவார் குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரியா சுலே, சுநேத்ரா பவார் இருவரும் பாராமதி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இவர்களைத் தவிர, குறிப்பிடத்தக்க வேட்பாளர்களாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுஹான் விதிஷா தொகுதியிலும், திக்விஜய் சிங் ராஜ்கர் தொகுதியிலும், மத்திய அமைச்சர்கள் ஜோதிர்ராதித்ய சிந்தியா குனா தொகுதியிலும், பிரஹலாத் ஜோஷி தார்வாட் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments