சூறைக்காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

0 391

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளப்பாறை கிராமத்தில் சூறைக்காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து கொண்டிருந்த மின்வாரிய தற்காலிக ஊழியர் குரு என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி அவர் கூச்சலிட்டபோது, உடன் வந்த சக ஊழியர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர் என்று கூறப்படுகிறது.

குரு வேலை செய்துகொண்டிருந்தபோது மின்மாற்றியை ஆன் செய்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் எனக் கூறி, உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments