பலத்த காற்றுடன் மழை - ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதம்

0 380

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சாளமலை ஈஸ்வரன்கோவில் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

குலை தள்ளி இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில், திடீர் காற்று மழையால் வாழை மரங்கள் ஒடிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments