சவுக்கு சங்கரின் கார் ஓட்டுநர்,அவரது நண்பரை கைது செய்தது போலீஸ்

0 329

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த நிலையில், அவருடன் இருந்த வாகன ஓட்டுநர் ராம் பிரபு மற்றும் அவருடைய நண்பர் ராஜரத்தினம் இருவரையும் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சவுக்கு சங்கரை கைது செய்தபோது காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியது, பணி செய்யவிடாமல் தடுத்தது, கஞ்சா பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் பயன்படுத்திய வாகனத்தில் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments