மனைவி பெயரில் மட்டுமே கடன் தர முடியும் எனக் கூறியதால் ஆத்திரம்.. தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டிய நபர் கைது..!

0 431

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

எடப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்ற அந்த நபர், திருவள்ளூரிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தமது வீட்டின் பேரில் கடன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது வீட்டை பார்வையிட சென்ற நிதி நிறுவன ஊழியர் அஜித்குமார், தங்கள் வங்கியின் விதிமுறைப்படி ஆண்கள் மீது கடன் தரமுடியாது என்றும் செல்வத்தின் மனைவி பெயரில் வேண்டுமானால் கடன் வழங்கலாம் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித்குமாரை கத்தியால் வெட்டியதாக செல்வம் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments