"துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக வேண்டும் என விரும்பும் பாகிஸ்தான்" - பிரதமர் மோடி சரமாரி விமர்சனம்

0 308

துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி, பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், தீவிரவாதிகளை ஏவி, அப்பாவி இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு காதல் கடிதங்களை அனுப்பியதாக விமர்சித்தார்.

எல்லையில் இந்திய பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்காமல் உலகரங்கில் அப்போதைய காங்கிரஸ் அரசு ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த நிலை மாறி, தற்போது துல்லிய தாக்குதல் மூலம் தீவிரவாதிகளை அவர்களின் சொந்த இடத்திற்கே சென்று அழிப்பதால், தங்களை காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கதறிக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments