கோத்தகிரி மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து.. 4 வயது சிறுவன் பலி, 14 குழந்தைகள் உள்பட 31 பேர் காயம்..!

0 378

கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சென்னையைச் சேர்ந்த 31 பேர் குழுவாக உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு மினி பேருந்தில் திரும்பிகொண்டிருந்தனர்.

பவானிசாகர் காட்சி முனை அருகே, பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து 60 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜன்னல் வழியாக வெளியே விழுந்து, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுவன் சர்வேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

காயமடைந்த 14 குழந்தைகள் உள்பட 31 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments