தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ரோஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. திரும்பிப் போ என்று கோஷம்.. வீட்டின் கதவுகளை மூடிக்கொண்ட மக்கள்..!

0 403

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் நகரி தொகுதியில் போட்டியிடும் ஆந்திர அமைச்சரான நடிகை ரோஜா, பிரச்சாரத்திற்கு வந்தபோது, வடமாலைபேட்டை அருகே உள்ள வேமாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்கள் கிராமத்துக்கு ரோஜா கடந்த 5 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை என்று கூறி கிராம எல்லையில் திரண்டிருந்த ஊர் பொதுமக்கள் ரோஜா ஊருக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். நீண்ட நேர சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பிறகு ரோஜா தமது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆனால் கிராம மக்களில் பலரும் வீடுகளின் கதவுகளை அடைத்து உள்ளேயே இருந்து கொண்டனர். எனவே ரோஜா சுமார் 10 நிமிடம் மட்டுமே பிரச்சாரம் செய்து அங்கிருந்து திரும்பி சென்று விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments