ராணுவத் தலைமை தளபதியால் உயிருக்கு ஆபத்து : இம்ரான் கான்

0 418

ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதி அஸிம் முனிரால் தமது உயிருக்கும், தமது மனைவியின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் முன்னணிப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் எழுதிய கட்டுரையில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆதரித்த வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்த போதும், பாகிஸ்தான் ராணுவம், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை ஆட்சியில் அமர வைத்ததாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments