அரசியலுக்கு வரவிருப்பம் இல்லை, வாக்களிப்பது தனி உரிமை - ஜோதிகா

0 399

ஜோதிகா நடித்துள்ள ஸ்ரீகாந்த் என்ற திரைப்படத்தின் அறிமுகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள மாலில் நடைபெற்றது.

அப்போது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, வாக்களிக்க நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிறைய வழிகளில் வாக்கு செலுத்தலாம் என்றும் கூறினார்.

அதை எப்படி செய்கிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சமூக அக்கறையுள்ள படத்தில் நடிக்கும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியலுக்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என முதலில் பதில் அளித்தவர் பின்னர் சுதாரித்துக்கொண்டு பிள்ளைகளை பார்த்துக்கொள்ளவே நேரமில்லை என்றும் அவர்களுக்கு போர்டு எக்சாம் உள்ளது என்றும் கூறியதுடன் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments